Monday, January 29, 2024

கேசவராஜின் குரலில் சிவபுராணம்..


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் பாடலில் சிவபுராணத்தை பாடும் கேசவராஜின் குரலில் ஒலிக்கும் தெய்வீக ராக ஆலாபனையை @KeshavrajsOfficial யூடியூப் சேனலில் நாற்பது லட்சம் பார்வையாளர்கள் கேட்டு பரவசம் அடைந்துள்ளதை கண்டு பிரமிக்க வைத்தது. சிவபுராணத்தை காலை, மாலை வேளைகளில் பாடும்போது நம்மிடையே உண்டாகும் சூப்பர் நேச்சுரல் பவரை உணர முடிவதுபோல, திருவாசகம் முழுமையும் பாடும்போது எல்லையில்லாத பேரின்பத்தை அடைய முடியும் என்பதை, திருஆனைக்கா ஊரிலுள்ள பரமேஸ்வரனுடைய தண்ணீர் ஸ்தலமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு விஜயமாகி ஒரு கற்தூணில் அமைந்த ஆலங்காட்டு காளியின் சிற்பத்தின் அருகில் அமர்ந்து பாடியபோது உணர்ந்து மகிழ்ந்தது. 2019ம் வருடம், ஜூலை 29 திங்களன்று பதிவேற்றமான வீடியோ காணொளி.  

No comments:

Post a Comment