Saturday, August 22, 2015

காளியம்மன் கோவில் திருவிழா.. 2015ம் ஆண்டு, மே 25 திங்கள்கிழமை

இந்த ஆண்டின் காளியம்மன் கோவில் திருவிழா ஆன்மீகப் பேராற்றலின் அனுபூதியாக, தெய்வீகத்தை தந்தது. கோடை விடுமுறை, பக்கத்துல இருக்குற பெரும்பாலான கிராமங்களில் கோயில் திருவிழா நடந்ததால உறவினர்கள் கூட்டத்தை அதிகமா பார்க்க முடியலை. ஒவ்வொரு கிராமங்கள்லயும் இறைவன், கடவுள் மேல மக்கள் வச்சிருக்கிற நம்பிக்கை அமானுஷ்யமானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே முன்னோர்கள் ஏற்படுத்துன தெய்வ நம்பிக்கை நடைமுறைகள். அது இன்னைக்கும் கட்டுறுதி குலையாம பாரம்பரியமா நடந்துகிட்டே வருது. கிராமங்கள்ல நடக்குற கோயில் திருவிழா மூலமா பல்வேறு தரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க முடியுது. தீய சக்திகள்கிட்ட இருந்து மக்களை காக்குற வலிமை தெய்வங்களுக்கு உண்டு என்ற வலிமையான நம்பிக்கைதான், சிலை வழிபாடு.. எப்படி நம்ம பெற்றோர்கள் முன்னோர்களோட உருவங்களை புகைப்படங்களில் கண்டு, பார்த்து வழிபாடு செய்யுறமோ, கடவுளோட உருவத்தை சிலைகளின் மூலமாக பாக்குறோம், வழிபாடு செய்கிறோம்..


காளியம்மன் கோவிலின் முன்பு ஊர் மக்கள் கூடி நின்று நையாண்டி மேளத்தை ரசிக்கின்றனர். புகழ்பெற்ற சினிமா பாடல்கள், கடவுள் பக்தி பாடல்களை நையாண்டி மேளம் வாசிப்பவர்களுடன் நாதஸ்வரம் இசைத்துப் பாடுகையில் கேட்பவர்களை பரவசம் கொள்ளச் செய்வதை காண முடியும்.



பால்ய நண்பன் முருகனின் அப்பா.. கையில் சூலாயுதம் ஏந்தி ஒவ்வொரு வருடம் நடக்கும் பொங்கல் திருவிழாவில் எல்லைச் சாமி என அழைக்கப்படும் கருப்பசாமியின் வேடம் அணிந்து உக்கிரமமாக ஆடுவதை காண்பதற்கே பரவசமாக இருக்கும். சிகை அலங்காரம் செய்வதற்கான அணிகலன், ஆடைகள் பக்கத்து ஊரான சங்கரன்கோவிலிலிருந்து வாங்கி வருவார்கள். சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலின் முன்புறம் அமைந்த சாலையில் சாமி கட்டி ஆடுவதற்கான ஆடைகள், பொருட்கள் விற்கப்படுவது, சிறப்பம்சமாகும்.  




கடவுள் காளியம்மனின் தேர் ஊருக்குள் கிளம்பிச் செல்லும் வேளையில்..




ஜோசியர் ராஜேந்திரன் அவர்கள்.. ஆண்டுதோறும் நடக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் அக்கினி சட்டி ஏந்தி வருவார். புதிய நூற்றாண்டு தொடங்கிய 2000ம் ஆண்டிலிருந்து சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகளாக அக்கினி சட்டி எடுத்து வருகிறார். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நண்பர்களின் அழைப்பின் பேரில் சென்று ஜாதகம் பார்த்து அருள்வாக்கு சொல்லி வருவார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் பிரபலமான ஜோதிடராக இருக்கிறார். இவருடைய குடும்பம், கானப்பாடி கம்ம குலம். குலதெய்வம்.. தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த ஸ்ரீநாரணம்மாள் கோவில்தான். ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பன் கோவிலிலிருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் 2.4 கிலோ மீட்டர்.


எனது குடும்பத்தின் குலதெய்வமும் தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பன் கோவில்தான். காளியம்மனின் உருவச் சிலையும், ஸ்ரீநாரணம்மாளின் உருவச் சிலையும் கோவில் திருவிழாவின்போது உருவ அமைப்பில் ஒன்றுபோல இருப்பதைக் கண்டு வியப்பாக பார்த்து.. ஓம் சக்தி.. பராசக்தி என்று நூறு முறை மந்திரம் செல்லுகையில் அந்த ஆண்டு முழுவதும் நினைத்த நல்ல காரியங்கள் தங்கு தடையில்லாமல் நடப்பதைக் கண்டு மெய்சிலிர்க்க வைக்கும்.










காளியம்மன் கோவிலின் அருகில் அமைந்த விநாயகர் கோவில்.. காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் தினமன்று.. விநாயகர் கோவிலின் முன்பு ஊர் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்..


ஜோசியர் ராஜேந்திரன் அவர்கள்.. ஆண்டுதோறும் நடக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் அக்கினி சட்டி ஏந்தி வருவார். புதிய நூற்றாண்டு தொடங்கிய 2000ம் ஆண்டிலிருந்து சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகளாக அக்கினி சட்டி எடுத்து வருகிறார். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நண்பர்களின் அழைப்பின் பேரில் சென்று ஜாதகம் பார்த்து அருள்வாக்கு சொல்லி வருவார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் பிரபலமான ஜோதிடராக இருக்கிறார். இவருடைய குடும்பம், கானப்பாடி கம்ம குலம். குலதெய்வம்.. தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த ஸ்ரீநாரணம்மாள் கோவில்தான். ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பன் கோவிலிலிருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் 2.4 கிலோ மீட்டர்.
 

காளியம்மன் கோவிலின் முன்பு.. முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மிப்பாட்டு பாடுவார்கள். தந்தனன்னே.. தந்தனன்னே.. தானனே.. பாடலின் வரிகள் இப்படி தொடங்கிச் செல்லும். கேட்பதற்கே பக்தி பரவசம் கொள்ளச் செய்யும்.






காளியம்மன் கோவிலின் முன்பு.. முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மிப்பாட்டு பாடுவார்கள். தந்தனன்னே.. தந்தனன்னே.. தானனே.. பாடலின் வரிகள் இப்படி தொடங்கிச் செல்லும். கேட்பதற்கே பக்தி பரவசம் கொள்ளச் செய்யும்.




காளியம்மன் கோவில் திருவிழா தொடங்குதற்கு ஒரு வாரம் முன்பு தயாரிக்கப்படும் முளைப்பாரி. திருவிழா நாளன்று.. ரம்மியமாக காட்சி அளிக்கும்.




குருவிகுளம் யூனியன் மாவட்டக் கவுன்சிலராக பத்து ஆண்டுகள், குருவிகுளம் யூனியன் சேர்மனாக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த விஸ்வாமித்திரன் அவர்களின் வீட்டின் முன்பு காளியம்மனின் சப்பரம் வந்து நிற்கும் வேளையில்.. 









Monday, May 18, 2015

காளியம்மன் கோயில் திருவிழா - மே 2015


சாமி! ஊரு கூட்டம். வீட்டுக்கு ஒரு ஆளு காளியம்மன் கோயிலுக்கு வந்துருங்க சாமியோ! இப்படி ஊருக்குள்ள பகடை கருப்பசாமியோட அப்பா தண்டோரா போடுவாரு. கோயில் திருவிழாவாகட்டும், ஊர் பொதுக் கூட்டமாகட்டும் பகடை ஐயா ஊருத் தெரு வழியா சொல்லிக்கிட்டு போவாரு. இப்படி இந்த வருஷம் நடக்கப்போகுற காளியம்மன் கோயில் திருவிழாவுக்கு ஊருக்குள்ள தண்டோரா போட்டுருக்காங்க. வெளியூர்ல குடியிருக்கிற ஊர் மக்கள் கலந்துக்குற மாதிரி கோடை விடுமுறையில காளியம்மன் கோயில் விழா நடக்குது. இந்த மாதம் (மே மாதம் 26, 27 தேதிகள்ல) காளியம்மன் கோயில் தேரோட்டமும், மஞ்ச நீராட்டு விழாவும் நடக்கப்போகுது. ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க இளைஞர்களின் சார்பில் வேண்டுகிறேன்..! 

Thursday, January 15, 2015

தை திருநாள் வாழ்த்துக்கள்!

குளக்கட்டாக்குறிச்சி கிராமத்து மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள நமது கிராமத்து மக்களுக்கும், கிராமத்து வலைப்பூவின் வாசகர்களுக்கும், 2015 ம் வருடத்தின் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்..!