Monday, May 18, 2015

காளியம்மன் கோயில் திருவிழா - மே 2015


சாமி! ஊரு கூட்டம். வீட்டுக்கு ஒரு ஆளு காளியம்மன் கோயிலுக்கு வந்துருங்க சாமியோ! இப்படி ஊருக்குள்ள பகடை கருப்பசாமியோட அப்பா தண்டோரா போடுவாரு. கோயில் திருவிழாவாகட்டும், ஊர் பொதுக் கூட்டமாகட்டும் பகடை ஐயா ஊருத் தெரு வழியா சொல்லிக்கிட்டு போவாரு. இப்படி இந்த வருஷம் நடக்கப்போகுற காளியம்மன் கோயில் திருவிழாவுக்கு ஊருக்குள்ள தண்டோரா போட்டுருக்காங்க. வெளியூர்ல குடியிருக்கிற ஊர் மக்கள் கலந்துக்குற மாதிரி கோடை விடுமுறையில காளியம்மன் கோயில் விழா நடக்குது. இந்த மாதம் (மே மாதம் 26, 27 தேதிகள்ல) காளியம்மன் கோயில் தேரோட்டமும், மஞ்ச நீராட்டு விழாவும் நடக்கப்போகுது. ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க இளைஞர்களின் சார்பில் வேண்டுகிறேன்..!