Saturday, April 22, 2023

அண்ணன் ராஜு..

2020ம் வருடம்.. பெரியப்பா ருத்திரப்பா நாயக்கரின் நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் விதமாக அனைவருக்கும் அழைப்பு விடுத்து அண்ணன் ராஜு, தமயந்தி அவர்களின் வீட்டில் வைத்து அக்டோபர் 12 திங்களன்று திதியினை செய்தபோது, 2004ம் வருடம் அக்டோபர் 12 செவ்வாய் தினமாக ருத்திரப்பா நாயக்கர் அவர்கள் சிவபதவி அடைந்ததை அண்ணன் ராஜுவிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அண்ணன் ராஜு, தூத்துக்குடி நகரிலுள்ள புகழ்பெற்ற வ.உ.சிதம்பரம் அரசு கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படிப்பை படித்தவர். முப்பது ஆண்டுகள் ஊரிலேயே விவசாயம் செய்தார். ராஜு, தமயந்தி இருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ணபிரியா, சாந்தா என இரண்டு மகள்கள். இரண்டு பெண் பிள்ளைகளும் பொறியியல் பிரிவில் கணிப்பொறி படித்து பெங்களூர், மெட்ராஸ் எனும் இரண்டு பெரிய நகரங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் கணினி துறையில் பணி புரிகின்றனர். 

தமயந்தி அவர்கள் தூத்துக்குடி ஜில்லா, அழகாப்புரம் ஊரில் பிறந்து வளர்ந்து குளக்கட்டாக்குறிச்சி ஊருக்கு திருமணமாகி வந்தார். திருமணம் ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடந்தது. கிருஷ்ணபிரியா, கோவில்பட்டி நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். பெங்களூரில் பணி புரிகிறார். பெரம்பலூரில் உள்ள ஹென்ஸ் ரோவர் பொறியியல் கல்லூரியில் இளங்கலை கணினியில் பட்டம் பெற்றவர். முதுகலை பட்டம் பெறவில்லை. கோவை புறநகரிலுள்ள கலைமகள் பொறியியல் கல்லூரியில் சாந்தா இளங்கலை கணினியில் பட்டம் பெற்று மெட்ராஸில் பணி புரிகிறார்.

கிருஷ்ணபிரியா, சாந்தா எனும் இரண்டு மகள்களை பெற்றெடுத்த தமயந்தி அவர்கள், தன்னுடைய அறுபத்து எட்டு வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 2023ம் வருடம் ஏப்ரல் 20 அன்று சிவபதவி அடைந்தார். மறுதினம் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. ருத்திரப்பா நாயக்கர் அவர்களுக்கு ஒரே மகன் ராஜு அவர்கள். ருத்திரப்பா அவர்களுடன் உடன் பிறந்த தம்பி அய்யலுசாமி அவர்கள், காரைக்குடி ஊரிலுள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் இளங்கலை சட்டம் பயின்று கோவில்பட்டி நகரிலுள்ள நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக பணி புரிந்தார். இவருக்கு இரண்டு மகன், மூன்று மகள் என ஐந்து குழந்தைகள். மூத்த மகன் பாபு என்பவர் அமெரிக்கா நாட்டில் சிவில் இன்ஜினியராக பணி செய்கிறார். மூத்த மகள் கமலா அவர்கள், இளங்கலை மருத்துவம் படித்து கோவில்பட்டி நகரில் கமலா மருத்துவமனை என்ற பெயரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறார். மூன்று வருட காலமாக உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அய்யலுசாமி அவர்கள், 2015ம் வருடம், மே மாதம் நாளன்று சிவபதவி அடைந்தார்.


கமலா, சம்பத்குமார் தம்பதியினர். கமலா அவர்கள், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பட்டம் பெற்றவர். சம்பத்குமார் கால்நடை மருத்துவராக திருநெல்வேலி நகரில் பணி புரிந்தார். பிரபலமான புலனாய்வு பத்திரிகையான நக்கீரன் வார இதழின் நிறுவனரான கோபால் அவர்கள், சம்பத்குமார் அவர்களுடன் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதை நக்கீரன் பத்திரிகையில் நிருபராக பணி புரியும் கோவில்பட்டி நண்பர் சொன்ன பிறகே அறிந்தது. மேற்கண்ட கட்டுரையில் உள்ளவர்கள் அனைவருமே எனது குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள்.