Saturday, January 26, 2013

குடியரசு தின வாழ்த்துக்கள்..

2013ம் வருடம்.. சுதந்திர இந்தியாவின் அறுபத்து நான்காம் ஆண்டு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.




இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் ராணுவ வீரர்களின் குடியரசு தின அணிவகுப்பு புகைப்படம் பிரமிப்பாக உள்ளது.

Sunday, January 13, 2013

ரெங்கசாமி நாயக்கர் அவர்களுடன்..

நமது கிராமத்திலேயே வயதில் முதியவர். தற்போது 95 வயது ஆகிறது. நான்கு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள் என ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தவர். தன்னுடைய இளமைப் பிராயத்தில் சுதந்திரப் போராட்ட காலகட்டங்களை நினைவு கூர்ந்தபோது, தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரிலுள்ள ரயில்வே ஸ்டேசனுக்கு வருகை தந்த மகாத்மா காந்தி அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்ற நிகழ்வினை சொன்னபோது ஜெய்ஸ்ரீராம் என மந்திரம் சொல்லி அத்தகைய வியப்பினை மனதிற்குள் நிறுத்தியது. குறைவான நேரமே பேசினாலும் தாத்தா ரெங்கசாமி அவர்களுடைய பேச்சு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வல்லமை பெற்றது. 


மகன் சீனிவாசன் என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்று தற்போது தமிழ்நாட்டின் தலைநகரமான மெட்ராஸில் வசிக்கிறார். இலங்கை நாட்டிற்கு இந்திய ராணுவம் அனுப்பிய IPKF எனும் அமைதிப்படை சென்று வந்த பிறகு விடுதலைப் புலிகளின் படைகள் நிலத்தில் புதைத்த கன்னி வெடிகளை எடுக்கும் ராணுவப் பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த விசயத்தை சீனிவாசன் அவர்களே என்னிடம் பேசினார். 

மகன் ஜெயராம் என்பவர், ஓசூரிலுள்ள லட்சுமி மில்லிற்கு பணிக்குச் சென்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஒய்வு பெற்று தற்போது ஒசூரிலேயே குடும்பத்துடன் வசிக்கிறார். 

குறிப்பு: இரண்டு தினங்கள் முன்பு BADA OS எனும் செயலியில் இயங்கும் ஸ்மார்ட் போன் மொபைலில் ரெங்கசாமி நாயக்கர் அவர்கள் பேசியதை பதிவு செய்தது.

Saturday, January 12, 2013

நேர்காணல்.. பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள்..

கோவை நகரின் விமான நிலையம் அருகிலுள்ள புகழ்பெற்ற பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் இருபத்தி நான்கு(24) ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள். 2005ம் ஆண்டு நவம்பரில் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள் நடத்தும் மேன்ஷனில் குடிவந்த பிறகு இலக்கியம், வரலாறு, சமூகம், சினிமா குறித்து நிறைய பேசி விவாதம் செய்தமையால் வலைப்பூவிற்கு கிராமங்களின் முன்னேற்றம் குறித்து பேச வேண்டும் என கேட்டபோது பத்து நிமிடங்கள் அருமையான நேர்காணலை பேசினார். 2012ம் ஆண்டு டிசம்பரில் பேராசிரியரின் இல்லத்தில் நேர்காணல் செய்தது. நான் பிறந்த ஊரில் எனது பக்கத்து வீட்டு பெரியப்பா நாராயணசாமி அவர்கள்.. பூ.சா.கோ கல்லூரியின் முதல்வராக பணிபுரியும் காலகட்டத்தில் ராஜேஸ்வரி அவர்கள் பேராசிரியராக பணியில் இணைந்த காலகட்டம் என்பதால்.. பிரபஞ்சத்தின் சக்தி இந்த நேர்காணலில் ஒரு பூமத்திய ரேகையில் இணைத்தது.  


2013ம் ஆண்டு பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் பட்டம் வாங்கியிருந்தார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசும் பேராசிரியர் அவர்கள்.. தமிழில் சிறப்பாக பேசியது பிரமிக்கச் செய்தது. நேர்காணல் செய்யும்போது இலக்கியத் தமிழில் பேசுவதை முதல் முறையாக கேட்டது. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தின் தொடர்ச்சியாக திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து உதயமாகும் கல்கி அவதாரம் குறித்து ராமாயணம், மஹாபாரதம் கதைகளுடன் நிறைய பேசியதுண்டு. 

மதுபானம் எனும் அரக்கன்.. சமூகத்தின் இளைய தலைமுறைகளை கலாச்சாரம், பண்பாட்டு தளத்தில் அழித்துக் கொண்டு வரும் கொடுமையான சூழ்நிலை.. இவற்றினை வேருடன் களைந்தெறியும் அக்கினி வேள்வி..

பிறந்த மண்ணை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்ப வேண்டும் எனும் லட்சியமுடன் வலைப்பூ உருவாக்கம் என்ற இரண்டு முக்கியமான கேள்விகளை ராஜேஸ்வரி அவர்களிடம் கேட்டபோது.. அற்புதமான பதிலைச் சொல்லி பிரமிக்கச் செய்தார்.