Saturday, September 9, 2023

கரிசல் காட்டில் உழவுப் பணிகள்..

சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் சர்வ மதசபை மாநாட்டில் சகோதர.. சகோதரிகளே.. என்று உரையை தொடங்கி உலகின் ஆணிவேரை ஆட்டம் காணச் செய்த தினமாக.. செப்டம்பர் 11 காலை வேளை, கிழக்கு திசையிலுள்ள கரிசல் காட்டிற்குச் சென்றபோது டிராக்டர் கொண்டு நிலங்கள் உழப்பட்டு ரம்மியமாக காட்சி தந்தது. மேற்கு திசையில் சங்குப்பட்டி ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள காடு, இங்கே கிழக்கு திசையில் உள்ள காடு என எனது இரண்டு காடுகளையும் தாய் மாமா அவர்கள்.. கட்டுக் குத்தகை பிடித்து விவசாயம் செய்கிறார். புதிய காற்று படத்தில் கல்கி அவதாரமாக நடித்த முரளியின் நினைவு தினமன்று.. காலைபொழுது டிராக்டர் கொண்டு உழவு செய்ததை மேற்கு திசையிலிருந்து வீசும் தென்றல் காற்றுடன் கண்டபோது, புதிய சுகந்தம் தந்தது.  குறிப்பு: இக்கட்டுரை மேலே உள்ள புகைப்படத்தை குறிப்பது..

முக்கூட்டுமலை ஊரின் மலையை நோக்கி பார்க்கும் கோணத்தில் உழவுப் பணி நடைபெற்ற காடுகள்.



கழுகுமலை செல்லும் சாலையை நோக்கி பார்க்கும் கோணத்தில் உழவுப் பணி நடைபெற்ற காடுகள்.