Monday, March 20, 2017

காவிரி நதிக்கரையில் பள்ளி கொண்டுள்ள அரங்கநாதர்..

உலகைக் காக்கும் தசாவதார நாயகனாக திருச்சி புறநகரில் காவிரி ஆற்றங்கரையில் ஸ்ரீரங்கம் கோவிலில் பள்ளி கொண்டுள்ள பெரிய பெருமாள்..


திருச்சி நகரிலுள்ள காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள மச்ச அவதாரம் ஸ்தலம். பத்து தலை கொண்ட ராவணனின் உடன் பிறந்த தம்பியான விபீஷணன் அயோத்தி நகரில் நடந்த ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டார். அயோத்தி மக்கள் பெரும் திரளாக பங்கேற்ற பட்டாபிஷேக விழா முடிந்த பிறகு இலங்கை நாட்டிற்குச் செல்ல ஸ்ரீராமரிடம் விடை பெறுகையில், ஸ்ரீராமபிரான் போற்றி வணங்கும் அரங்கநாதரின் திருவுருவச் சிலையை தன்னுடைய இலங்கை நாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டுகோள் வைக்கையில், இஷ்வாகு குலத்தோன்றலான ஸ்ரீராமபிரான் கொடையாகத் தந்தார். அதன் பின்னர் தெய்வீக ஆற்றல் கொண்ட அரங்கநாதர் காவிரி நதிக்கரையில் பள்ளிகொண்டது தல வரலாறாகும்.  

இத்திருத்தலத்திற்கு அருகேயுள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் சாபவிமோசனம் நீங்க தவமிருந்த சந்திர பகவானுக்கு, பெரிய பெருமாள் சாபவிமோசனம் அளித்தார். இந்த தீர்த்தத்தில் சந்திரனுடன் மகாலட்சுமியும் உடன் பிறந்தார். ஒவ்வொரு யுகங்களிலும் தர்மங்கள் நிலைகுலைந்து அதர்மங்கள் தலை விரித்தாடும்போது நல்லவர்கள் மற்றும் பக்தர்களை காக்கும் பொருட்டு தனது உயர்ந்த நிலையிலிருந்து கீழிறங்கி மனித குல மக்களுடன் அவதாரமாக பிறக்கிறார்.

அரங்கநாதரின் உத்தரவுக்காக காத்திருக்கும் பெரிய திருவடி கருடாழ்வார் பெரிய பெருமாளின் வலது கரத்தை தனது புஜங்களின் மீது தங்கியுள்ளார்.

ஓம் நமசிவாய..
ஓம் நமோ நாராயணா..