Wednesday, January 11, 2012

மெட்ராஸில்..

முப்பது வருடங்கள் முன்பு நடுத்தர குடும்பமாக இருந்தவர்கள், இன்றைய நாளில் நல்ல பொருளாதார நிலையுடன் சிறிய பணக்காரர் எனும் நிலையை அடைந்த பின்பு.. முப்பது வருடங்கள் முன்பு பெரிய பணக்கார குடும்பமாக இருந்தவர்கள் பெரிய கோடீஸ்வரர்கள் எனும் நிலையை அடைந்ததை ஊரிலே கண்முன்னே பார்க்க முடிந்தது. நாச்சியார் அம்மா மகன் ஹரிபாலகண்ணன், இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலே இந்திய நாட்டின் ராணுவத்தில் பணிபுரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் முப்பது லட்சம் செலவில் வீடு கட்டி குடும்பத்துடன் வசிப்பதை மூத்த அண்ணன் ஹரிகேசவன் நான்கு வருடம் முன்பு சொன்னார். 2011ம் வருடம், டிசம்பரில்.. மெட்ராஸில் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்புறமுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகிலுள்ள ராணுவ குடியிருப்பில் ஹரிபாலகண்ணன் தங்கி இருந்தபோது, சாலையில் நடந்து வருகையில் இரவு ஏழு மணி அளவில் பார்த்து நலம் விசாரித்தது. எவரிடமும் கடன் வாங்காமல் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நிம்மதியாக செல்வதாக சொல்ல.. மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வேளை மேற்கண்ட விசயங்களை சொன்னேன். முகமலர்ச்சியுடன் சிரித்தார்.

2011ம் வருடம்.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நூற்றாண்டு வருடமாக அமைந்து, டிசம்பரில் முடியும் தருணத்தில் இருந்தது. மாமா ஹரிபாலகண்ணனை சந்தித்து பேசிய பின்பு ஐந்து நாட்களில் தானே புயல் வந்து கடலோர மாவட்டங்களில் பலத்த சேதாரங்களை ஏற்படுத்தி இருந்தது. மருத்துவர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டங்களை நடத்திக் கொண்டு இருந்தார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளிடம் மருந்து கட்டும் காம்பவுண்டர்கள் இருபது, முப்பது ரூபாய் என பணம் வசூலித்து வயிறை நிரப்பிக் கொண்டு இருந்தார்கள். ஹரிகேசவன், ஹரிபாலகண்ணன் இருவருடன் பிறந்த இளைய தம்பி கற்பகராஜ். இந்தப் பையனும் இந்திய நாட்டின் ராணுவத்தில் பதினேழு வருடங்கள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று ஊரில் வசித்துக் கொண்டு விவசாயம் செய்கிறார். இரண்டு அண்ணனுடன் பிறந்த இளைய சகோதரி, கற்பகராஜின் அக்கா மணிமேகலை என்பவர் கல்யாணமாகி வெளியூரில் வசிக்கிறார்.