Tuesday, August 22, 2023

மாமன்னர் பூலித்தேவன்..

பெரியப்பா ராமசாமி அவர்களை ஊரில் உள்ள மக்கள் தலைவர் என அழைப்பார்கள். கல்லூரி வரை படித்தவர். இவருக்கு வத்சலா என்ற ஒரே மகள். ஊரில் உள்ள தனது வீட்டில் தீப்பெட்டி குச்சிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வந்தார். ஊரில் உள்ள பெண்கள் எல்லோருமே ஒரு மாதமாவது இங்கே வேலை செய்திருப்பார்கள். தனது வீட்டின் ஒரு பகுதியில் தபால் நிலையமும் நடத்தி வந்தார். பெரியப்பா ராமசாமி உடன் பிறந்த தம்பியின் பெயர் நாராயணசாமி. இவர் கல்லூரி படிப்பு முடித்து கோவை நகரிலுள்ள புகழ்பெற்ற பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் மனித உரிமையியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகையில் விடுதி வார்டனாகவும் பணி புரிந்தார். பின்னர் பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக 1988ம் ஆண்டு மே 19 வியாழக்கிழமை அன்று பதவியேற்றதை.. 2012ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று கல்லூரியில் ஒரு தேர்வு எழுதச் சென்றபோது புகைப்படம் எடுக்கையில் கண்டது. டிசம்பர் 30.. இந்திய விண்வெளித் துறையின் விடிவெள்ளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவு தினம்.

விக்ரம் சாராபாய் அமரத்துவமான 1971ம் ஆண்டு.. பீம்லா நாயக் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் செப்டம்பர் 2 அன்று பிறந்தார். முந்தைய 1970ம் ஆண்டு செப்டம்பர் 2 தினமாக.. முக்கடலின் சங்கமமான கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்த நினைவுப் பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் திறப்பு விழா கண்டது, ஒரு சிறப்பம்சமாகும்.   

பெரியப்பா ராமசாமியின் மகளான வத்சலா அவர்கள், பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் முதுகலை கணிப்பொறி படித்த பின்பு கத்தார் நாட்டிற்கு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணிக்குச் சென்றதை சிறு வயதில் பெரியப்பா சொல்லி அறிந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக பணி புரிந்தார். மாமன்னர் பூலித்தேவனின் 307வது ஆண்டு பிறந்த தினமன்று.. சென்னை நகரில் தனது மகனுக்கு திருமண வைபவத்தை சிறப்பாக நடத்தி முடித்ததை.. பாட்ஸா படத்தின் புரொடியூஷர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் பிறந்த தினமன்று(செப்டம்பர் 9).. கோவில்பட்டி அருகிலுள்ள உப்பத்தூர் ஊரின் அருகில் வத்சலா அவர்கள் நடத்தும் பள்ளிக்கூடத்திற்கு விஜயமானபோது, திருமண வைபவத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தது.  

1993ம் ஆண்டு ரிலீசாகி உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற ஜுராஸிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பிறந்த தினமன்று.. கடந்த ஆண்டு டிசம்பர் 18 தினமாக.. கத்தார் நாட்டில் நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வென்று கேப்டன் மெஸ்ஸி விளையாடிய அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதை மறுதினம்.. வத்சலா அவர்களிடம் சொல்லி பெருமிதம் அடைந்தேன்.

குறிப்பு: மாமன்னர் பூலித்தேவனின் போர் படைத் தளபதி ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இருநூறாவது ஆண்டு நினைவு தினம்.. 1971ம் ஆண்டு ஆகஸ்டு 20.