Sunday, January 28, 2024

பயிர்களின் விலைவாசி..

டிசம்பர் 17 அன்று நண்பகல் 12 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி மறுநாள் காலை வரையில் இருபது மணி நேரமாக பெய்த பெருமழையில் கரிசல் காட்டில் அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்துப் பயிர்கள் சேதாரமாகி மைப்பு எனும் இளவட்டு விழுந்ததில் குவிண்டாலுக்கு கிடைக்க வேண்டிய சரியான விலை இப்போது இல்லை என்பதை பயிர்களை வாங்கி ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் சொல்கிறார்கள். மாரியப்பன் என்பவர் கழுகுமலை ஊரில் தேரடி வீதிக்கு அருகில் மாரிசெல்வம் என்ற பெயரில் கமிஷன் கடை வைத்துள்ளார். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து விளையும் மக்காச்சோளம், உளுந்து, பாசிபயிறு, சூரியகாந்தி, பருத்தி, ஆமணக்கு, எள், தட்டாம்பயிறு, மொச்சை பயிறு என இத்தைகைய பயிர்களை வாங்கி ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்கிறார். பக்கத்து ஊரான சீகம்பட்டியிலிருந்து ரமேஸ், குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து குமார் என கமிஷன் கடை வியாபாரம் செய்பவர்கள் உள்ளனர். 

மக்காச்சோள பயிர்கள் இருபது நாட்களுக்குப் பிறகு அறுவடைக்கு தயாராக உள்ளது. மாசி மாத இறுதியில் அறுவடை நடக்கும் எனச் சொல்லலாம்.

No comments:

Post a Comment