மேற்கு திசை மூலக்காடு, தென்கிழக்கு மூலைகாடுகளில் சிற்சில இடங்களில் இரண்டாவது நடவு செய்த விதை பயிர்களுக்கு தேவையான அளவு மழை பெய்யாமல், மூன்றாவது முறையாக விதைகளை நடவு செய்யும் பட்சத்தில் கூடுதலான பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகிறது என்பதை பார்க்கிறோம். சில வாரங்களில் பருவ மழை பெய்யத் தொடங்கி அனைத்து விதமான பயிர்களும் வளரத் தொடங்கியது.
இத்தகைய சூழலில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் நாள் வரையில் இருபத்தி எட்டு மணி நேரமாக பெய்த கனமழையால் மக்காச்சோளம் பயிர்கள் நன்றாக வளர்வதற்கான அடித்தளம் அமைந்தது. 2023ம் வருடம், டிசம்பர் 17 அன்று நண்பகல் ஒரு 01:00 மணிபோல பெய்யத் தொடங்கிய பெருமழை, மறுதினம் டிசம்பர் 18 அன்று காலை வரையிலும் பெய்து ஊரிலுள்ள குளம் நிரம்பி மாறுகால் செல்லும் பொழுதாக, எட்டு மணி அளவில் வானம் கும்மிருட்டாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சொட்டு மழைகூட பெய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. இதேபோல அதிக கனமழைதான் கடந்த 2024ம் வருடத்தின் டிசம்பரில், மூன்று நாட்களுக்கு முன்பாக பெய்து பொதுமக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தது.
அக்டோபர் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாமல் போக்குகாட்டிக் கொண்டே இருந்த வேளை, அக்டோபர் மாதத்தின் கடைசி தினமாக பெருமழையாக பெய்து மக்களை நிம்மதி பெருமூச்சினை அடையச் செய்தது. மக்காச்சோளம், உளுந்துப் பயிருக்கான அறுவடைப் பணிகள் தை திருநாளுக்குப் பிறகான நாட்களில் வேகமாக நடைபெறத் தொடங்கியது.
மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2700/- எனவும், உளுந்தம் பயிறு குவிண்டாலுக்கு ரூ.7000/- எனவும், இந்த வருடம் மார்ச் மாதத்தின் முதல் வாரமாக வேளாண்மை சந்தையில் விலை நிர்ணயமாக இருப்பதை அறிய முடிந்தது. மார்ச் மாதம், முதல் வாரம் நிலவரப்படி உளுந்தம் பயிறு அறுவடைப் பணிகள் முழுமையாக முடிவடைந்து, மக்காச்சோளம் அறுவடை மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு இருபது முதல் இருபத்தி ஐந்து குவிண்டால் வீதம் மகசூலினை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment