Saturday, April 20, 2024

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு..

சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து விதமான வாக்குப் பதிவும் காளியம்மன் கோவிலுக்கு இடதுபுறமாக உள்ள கட்டிட வளாகத்தில் நடைபெறும். கோவிலை புனரமைத்து புதிதாக கட்ட வேண்டி கடந்த வருடம் காளியம்மன் கோவில் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிட வளாகப் பணிகள் நடைபெறுவதால், அருகிலுள்ள கட்டிடத்தில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை. இதற்கு மாற்றாக, கழுகுமலை ஊருக்குச் செல்லும் சாலையிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் வலதுபுறமாக உள்ள குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்ட அறையில் ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை காலை வேளை தொடங்கி மாலை வேளை வரை வாக்குப் பதிவு நடந்தது. என்னுடைய வாக்கினை நடுப்பகல் சூரிய வெளிச்சம் பொழுதாகச் சென்று பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினேன். ஸ்ரீராமனின் பெயரை தன்னுடைய பெயரில் கொண்ட தீவிரமான கட்சி நண்பர், எனக்குப் பிறகு வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை செய்ததாக சொல்லி மகிழ்ச்சியுடன் பேசினார்.

No comments:

Post a Comment