2013ம் வருடத்தில் நடைபெற இருந்த காளியம்மன் கோவில் வருடாந்திர கொடை விழாவிற்கு இரண்டு மாதம் முன்பாக நல்ல நல்ல புகைப்படங்களை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்கை அனுப்பியபோது, 1983ம் வருடத்தின் மே 12 நாளில் காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் பிறந்ததை ஞாபகமாக குறிப்பிட்டு சொன்னார். அப்பா கிருஸ்ணசாமி அவர்கள், காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் பணிபுரிகையில் இந்திய ராணுவத்தின் மருத்துவமனை ஒன்றில் உடன்பிறவா தங்கை பிறந்த நிகழ்வு, ஒரு வரலாற்று நிகழ்வுபோல மெய்சிலிர்க்க வைத்தது.
பிறந்த ஊரிலிருந்து முன்னூறு அல்லது ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பாலும் இருக்கையில் பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளின் மூலமாக தங்கையுடன் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதற்கு ரமண மஹரிஷி, சந்திரசேகர பாரதி சுவாமிகள் எனும் இருவரின் ஆன்மீகப் பேராற்றல் உறுதுணை புரிந்தது. இந்த வருடத்தின் ஜூலை மாதம், இரண்டாவது வாரத்தின் முதல் தினமாக காளியம்மன் சாமியின் முன்பாக தங்கையுடன் சில நிமிடங்கள் பேசியபோது, கராத்தே மணியுடன், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த @ரங்கா படத்தின் இயக்குநர் தியாகராஜன் அவர்களின் நினைவு நாளான ஜூலை 1 அன்று.. கோவை நகரின் அவிநாசி சாலையிலுள்ள பிராட்வே சினிமாஸில் @கல்கி 2898 AD படத்தினை பார்த்த நிகழ்வினை பேசியது.